திருமணம் நடைபெறுவதற்கு முன்னதாக இல்லற வாழ்வில் ஈடுபடும் மணமக்களின் குடும்ப உறவு மேம்பட மணமக்களை அழைத்து அவர்களுக்கு மார்க்க அறிஞர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக மெளலவி முஃப்தி அப்துல் ஹாதி அவர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு சிறந்த சொற்பொழிவை வழங்கினார். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சொற்பொழிவை மணமக்கள் ஆர்வத்துடன் கேட்டனர். மேலும் கடற்கரைதெரு ஜும்மா பள்ளி இமாம் மெளலவி சபியுல்லாஹ் அன்வாரி அவர்கள் மணமகன்களுக்காக செக்கடி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சொற்பொழிவு ஆற்றினார்.
சொற்பொழிவில் பள்ளி, கல்லூரியில் படித்த கையோடு, அல்லது அலுவலகப் பணியின் சுமைகளோடு மணமேடையில் வந்து அமரும் இன்றைய மணமக்களுக்கு, கணவன்-மனைவியின் உரிமைகள் - கடமைகள் என்ன என்பது குறித்தும், இல்லறத்தின் நெளிவு சுளிவுகள், விட்டுக்கொடுத்தல், மன்னித்தல், உறவுகளின் அருமை ஆகியன குறித்தும், குடும்ப வாழ்க்கையைச் சிதைத்துவரும் திடீர் 'தலாக்', அவசர 'குலா' ஆகியன குறித்து எடுத்துரைக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மணமக்கள் அனைவரும் தங்கள் பெற்றோருடன் கலந்துகொண்டனர். அதிரை வரலாற்றில் முதன்முறையாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி இல்லற வாழ்வில் ஈடுபடும் மணமக்களுக்கு நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்தி, உறவு மேம்பட உதவும் என பலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் அனைவரின் வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியை மீண்டும் சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி எதிர்வரும் [ 10-01-2016 ] ஞாயிறுக்கிழமை காலை 10 மணியளவில் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்த மணமக்களை அழைத்து மார்க்க அறிஞர்களின் இஸ்லாமிய அடிப்படையிலான வழிகாட்டுதல் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் மணமுடித்து இல்லற வாழ்வில் ஈடுபட்டுவரும் மணமக்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ReplyDelete//திருமணம் நடைபெறுவதற்கு முன்னதாக இல்லற வாழ்வில் ஈடுபடும் மணமக்களின் குடும்ப உறவு மேம்பட//
Bad write-up with a bad sense! இப்படி அமையவேண்டும்:
"திருமணம் நடைபெறுவதற்கு முன்னதாக," என்று ஒரு கமா இட்டு, சொற்றொடர் அமைந்திருந்தால், அர்த்தம் அனர்த்தமாகி இருக்காது. நல்ல தமிழ் எழுதப் பழகுங்களப்பா!