தற்போது நடைமுறையிலுள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக,
புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் நாளை 01.04.2017 முதல்,
குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் பெற்று வரும்
அந்தந்த நியாய விலை அங்காடிகளிலேயே வழங்கப்படவுள்ளது என
மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
தற்போது நடைமுறையிலுள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக, புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் 01.04.2017 முதல், குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் பெற்று வரும் நியாய விலை அங்காடிகளிலேயே வழங்கப்படவுள்ளன. விநியோகத்திற்கு தயாராக உள்ள ஸ்மார்ட் குடும்ப அட்டைதாரர்களின் மொபைல் போனிற்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) குறுஞ்செய்தியாக வரப்பெறும். கடவுச்சொல்லினை 7 தினங்களுக்குள் உபயோகப்படுத்த வேண்டும். ஒரு முறை கடவுச்சொல் (OTP) குறுஞ்செய்தியாக வரப்பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் மட்டும் தற்போதைய குடும்ப அட்டை மற்றும் குறுஞ்செய்தியுடன் ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கப்படவுள்ள நியாய விலைக் கடை பணியாளரிடம் சென்று குறுஞ்செய்தியில் உள்ள ஒரு முறை கடவுச்சொல்லினை (OTP) காண்பித்து, ஒப்புதல் பட்டியலில் கையொப்பம் செய்து, நியாய விலை அங்காடி விற்பனையாளரால் விற்பனை முனையக் கருவியில் (POS) ஸ்கேன் செய்யப்பட்ட பின்னர், புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டை பெற்றிட கட்டணம் ஏதும் செலுத்திட வேண்டியதில்லை. இதன் மூலம் குடும்ப அட்டை பதிவானதற்கான ஒப்புதல் குறுஞ்செய்தி குடும்ப அட்டைதாரரின் மொபைல் போனிற்கு வரப்பெறும். இது வரை மொபைல் போன் எண்ணை பதிவு செய்யாதவர்கள் உடனடியாக தங்களது மொபைல் போன் எண்ணினை நியாய விலை அங்காடிக்குச் சென்று பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டையினைப் பெற்று, அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழான பலன்களை பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.
புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் நாளை 01.04.2017 முதல்,
குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் பெற்று வரும்
அந்தந்த நியாய விலை அங்காடிகளிலேயே வழங்கப்படவுள்ளது என
மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
தற்போது நடைமுறையிலுள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக, புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் 01.04.2017 முதல், குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் பெற்று வரும் நியாய விலை அங்காடிகளிலேயே வழங்கப்படவுள்ளன. விநியோகத்திற்கு தயாராக உள்ள ஸ்மார்ட் குடும்ப அட்டைதாரர்களின் மொபைல் போனிற்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) குறுஞ்செய்தியாக வரப்பெறும். கடவுச்சொல்லினை 7 தினங்களுக்குள் உபயோகப்படுத்த வேண்டும். ஒரு முறை கடவுச்சொல் (OTP) குறுஞ்செய்தியாக வரப்பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் மட்டும் தற்போதைய குடும்ப அட்டை மற்றும் குறுஞ்செய்தியுடன் ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கப்படவுள்ள நியாய விலைக் கடை பணியாளரிடம் சென்று குறுஞ்செய்தியில் உள்ள ஒரு முறை கடவுச்சொல்லினை (OTP) காண்பித்து, ஒப்புதல் பட்டியலில் கையொப்பம் செய்து, நியாய விலை அங்காடி விற்பனையாளரால் விற்பனை முனையக் கருவியில் (POS) ஸ்கேன் செய்யப்பட்ட பின்னர், புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டை பெற்றிட கட்டணம் ஏதும் செலுத்திட வேண்டியதில்லை. இதன் மூலம் குடும்ப அட்டை பதிவானதற்கான ஒப்புதல் குறுஞ்செய்தி குடும்ப அட்டைதாரரின் மொபைல் போனிற்கு வரப்பெறும். இது வரை மொபைல் போன் எண்ணை பதிவு செய்யாதவர்கள் உடனடியாக தங்களது மொபைல் போன் எண்ணினை நியாய விலை அங்காடிக்குச் சென்று பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டையினைப் பெற்று, அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழான பலன்களை பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.