தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி 63-வது கல்லூரி ஆண்டு விழா நிகழ்ச்சி திங்கட்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரிச் செயலர் எஸ்.ஜே அபுல் ஹசன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் ஏ. முகமது முகைதீன் கல்லூரி ஆண்டரிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினராக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பி.மணிசங்கர் கலந்துகொண்டு ஆற்றிய கல்லூரி நாள் விழா பேருரையில்;
நீங்கள் பாக்கியசாலிகள் 30 % மாணவர்கள் மட்டும்தான் உயர்கல்வி படிக்கின்ற வாய்ப்பு அமைகிறது. மாணவர்களுக்கு கடின உழைப்பும், அவசியம் வேண்டும். இவைதான் வெற்றிக்கான முக்கியப் பணிகள். முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் அவர்களுக்கு விடா முயற்சி என்ற குணம் இருந்ததால் தான் இந்தியா தனது முதல் ராக்கெட்டை விண்ணில் ஏவ முடிந்தது' என்றார். பின்னர், பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற 17 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
விழாவில், தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கலைக்கல்லூரி முதல்வர் ஏ.திருவள்ளுவர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
மேலும், கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் நூறு சதவிகிதம் கல்லூரிக்கு வருகை புரிந்த 102 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியை உதவிப் பேராசிரியர்கள் ஜி.ஆர் ஞானராஜா, ஐ. முகமது நாசர் ஆகியோர் தொகுத்து வழங்கினர். விழா முடிவில், வணிகவியல் துறை இணைப் பேராசிரியர் ஏ. ஆசிக் இக்பால் நன்றி கூறினார்.
இவ்விழாவில், கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள். கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக, ஆய்வகப்பணியாளர்கள் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.