அஜ்மானில் மரணமடைந்த மேற்கு வங்க இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் ஒத்துழைப்புடன் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது
அஜ்மானில் உள்ள தமிழ் நிறுவனம் ஒன்றில் மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாபூர் பகுதியைச் சேர்ந்த பிஸ்வாஸ் ஹலிம் வேலை செய்து வந்தார். இவர் அந்த நிறுவனத்தில் இருந்து திடீரென காணாமல் போய்விட்டார். அதன் பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க இந்திய துணை தூதரகம் மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்த உடலை கொண்டு செல்ல ஒரு நபர் தேவை என ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் இடம் தெரிவித்தனர்.
ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம்.ஹபிபுல்லா கான் மற்றும் பொதுச்செயலாளர் ஏ. ஹமீது யாசின் ஆகியோரது ஆலோசனைப்படி செயற்குழு உறுப்ப்பினர் கவுசரை அனுப்பி வைப்பது என முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் துபாயில் இருந்து 08-ஆம் தேதி இரவு ஏர் இந்தியா விமானம் மூலம் புறப்பட்டு இன்று 09-ஆம் தேதி கொல்கத்தா விமான நிலையத்தில் அவரது குடும்பத்தினரிடம் கவுசர் ஒப்படைத்தார்.
பிஸ்வாஸ் ஹலிமின் குடும்பத்தினர் ஈமான் அமைப்பின் மனிதாபிமான பணிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
அஜ்மானில் உள்ள தமிழ் நிறுவனம் ஒன்றில் மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாபூர் பகுதியைச் சேர்ந்த பிஸ்வாஸ் ஹலிம் வேலை செய்து வந்தார். இவர் அந்த நிறுவனத்தில் இருந்து திடீரென காணாமல் போய்விட்டார். அதன் பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க இந்திய துணை தூதரகம் மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்த உடலை கொண்டு செல்ல ஒரு நபர் தேவை என ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் இடம் தெரிவித்தனர்.
ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம்.ஹபிபுல்லா கான் மற்றும் பொதுச்செயலாளர் ஏ. ஹமீது யாசின் ஆகியோரது ஆலோசனைப்படி செயற்குழு உறுப்ப்பினர் கவுசரை அனுப்பி வைப்பது என முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் துபாயில் இருந்து 08-ஆம் தேதி இரவு ஏர் இந்தியா விமானம் மூலம் புறப்பட்டு இன்று 09-ஆம் தேதி கொல்கத்தா விமான நிலையத்தில் அவரது குடும்பத்தினரிடம் கவுசர் ஒப்படைத்தார்.
பிஸ்வாஸ் ஹலிமின் குடும்பத்தினர் ஈமான் அமைப்பின் மனிதாபிமான பணிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.