அதிராம்பட்டினம், அக்.13
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம், தஞ்சாவூர் வாசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய பள்ளி மாணவர்களுக்ககான இலவச கண் பரிசோதனை முகாம் அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை காலை நடைபெற்றது.
முகாமிற்கு, அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.கே சம்சுதீன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் எஸ்.மீனாகுமாரி, ரோட்டரி சங்கச் செயலாளர் இசட். அகமது மன்சூர், பொருளாளர் எஸ். சாகுல்ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தார்.
தஞ்சாவூர் வாசன் கண் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ஆனந்த் தலைமையிலான மருத்துவக்குழுவினர் 800 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். இதில், 60 மாணவர்கள் உயர் சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்டனர்.
இம்முகாமில், ரோட்டரி சங்க நிர்வாகிகள் டி.முகமது நவாஸ்கான், அன்வர், உதயகுமார், முகமது தமீம், வைரவன், நடராஜன், முகமது ஜமால், ரியாஸ் அகமது, சேக் அப்துல்லா, ராஜிக் அகமது மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம், தஞ்சாவூர் வாசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய பள்ளி மாணவர்களுக்ககான இலவச கண் பரிசோதனை முகாம் அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை காலை நடைபெற்றது.
முகாமிற்கு, அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.கே சம்சுதீன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் எஸ்.மீனாகுமாரி, ரோட்டரி சங்கச் செயலாளர் இசட். அகமது மன்சூர், பொருளாளர் எஸ். சாகுல்ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தார்.
தஞ்சாவூர் வாசன் கண் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ஆனந்த் தலைமையிலான மருத்துவக்குழுவினர் 800 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். இதில், 60 மாணவர்கள் உயர் சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்டனர்.
இம்முகாமில், ரோட்டரி சங்க நிர்வாகிகள் டி.முகமது நவாஸ்கான், அன்வர், உதயகுமார், முகமது தமீம், வைரவன், நடராஜன், முகமது ஜமால், ரியாஸ் அகமது, சேக் அப்துல்லா, ராஜிக் அகமது மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.