தியாகத்தின் நிலைகள் பாரும்
தீஞ்சுடரைத் தேகம் வென்றும் !
அயராது கனவு வந்தும்
அழைத்தவுடன் தன்னைத் தந்தும் !
துயரங்கள் தொடர்ந்து வந்தும்
தொல்லைக்கு பகரம் கண்டும்
உயர்ந்தவகை ஒட்ட கங்கள்
ஒவ்வொன்றாய் குர்பான் ஈடாய்
சிகரத்தில் மனிதம் வாழ
செயலாற்றி வாழ்ந்த கோமான்
பகரங்கள் ஏதும் உண்டோ
பண்பாளர் நபிக ளார்க்கு !
அகரமுதல் ஆதி தொட்டு
அக்குடும்பம் பட்டத் தொல்லை !
நிகராகா ஹுசைனார் துன்பம்
நீண்டதங்கே சிரசைக் கொய்தும் !
இறைக்காக அர்ப னிப்பு
இவ்விதமாய் இருக்க காப்பு !
மறைவேதம் காட்டும் மாண்பு
மனிதாநீ மனிதன் ஆக !
திரைகொண்டு வடிக்கும் பாதை
தியாகப்பெ ருநாளாய்ப் பாடம் !
முறையாக உன்னில் காணு
முன்னேற அதனுள் பேணு !
அருவவனின் தூதாய் வந்த
அண்ணலார் தியாக வாழ்வை
அருள்நிறைவாய் அடையக் காணு !
அனைவரையும் தானாய்க் காண !
திருநாளில் வணக்கம் தந்தார்
திருவவனில் மூழ்கச் சொன்னார்
பெருமானார் வாழ்வே இன்பம் !
பேரின்பங் காண வேண்டும் !
விளக்கம்: (சில வற்றிற்கு)
தீஞ்சுடரைத் தேகம் வென்றும் -: அன்று இப்றாஹீம் நபி (அலை) அன்னவர்கள் நெருப்புக் குண்டத்தில் வீசப்பட்டபோது அத்தீசுவாலைத் தீண்டாது இதமாகவே அன்னவர்களை காத்தது. எந்த பாதிப்புமின்றி அதிலிருந்து வெளிவந்தனர்.
அயராது கனவு வந்தும் -: நபி இப்றாஹீம் (அலை) அன்னவர்களுக்கு மீண்டும் மீண்டும் தம் மகனார் நபி இஸ்மாயில் (அலை) அன்னவர்களை குர்பானி கொடுப்பதுபோல் கனவு வந்தது.
அழைத்தவுடன் தன்னைத் தந்தும் -: தந்தையார் நபி இப்றாஹீம் (அலை) தம் கனவுகளை கூறி இறைகட்டளையை நிறைவேற்ற அழைத்தபோது தயங்காது 'இறைவன் இட்ட கட்டளையை நிறைவேற்றுங்கள்', தந்தையே என்று நபி இஸ்மாயில் (அலை) அன்னவர்கள் தன்னை அறுத்து இறைவனுக்காக அர்பனிக்க முன்வந்தார்கள்.
துயரங்கள் தொடர்ந்து வந்தும்
தொல்லைக்கு பகரம் கண்டும்
உயர்ந்தவகை ஒட்ட கங்கள்
ஒவ்வொன்றாய் குர்பான் ஈடாய் -: இவ்வாறு தொடர் துயர்சோதனைகள் பல தொடர்ந்து அந்நபி வழி குடும்பத்தில் பெருமானார் (ஸல்) அன்னவர்கள் தந்தை அப்துல்லாஹ் அன்னவர்களை பலியிடப்படவேண்டும் என்றொரு நிகழ்வு ஏற்பட அதற்கு பகரமாக 100 ஓட்டகைகளை அறுத்து பலியிட்டு காக்கப்பட்டார்கள்.
நிகராக ஹுசைனார் துன்பம்
நீண்டதங்கே சிரசைக் கொய்தும் -: அன்னலார் பெருமானார் அன்னவர்கள் வழிப் பேரர் இமாம் ஹுசைனார் (ரலி) அவர்களின் சிரசை கர்பலா யுத்தத்தில் கொய்தனர் மாபாதகர்கள்.
அருவவனின் தூதாய் வந்த -: உருவமற்றவன் இறைவன். அவனின் தூதவராக வந்தவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்.
ஷேக் அப்துல்லாஹ் அ.
அதிராம்பட்டினம்.
தீஞ்சுடரைத் தேகம் வென்றும் !
அயராது கனவு வந்தும்
அழைத்தவுடன் தன்னைத் தந்தும் !
துயரங்கள் தொடர்ந்து வந்தும்
தொல்லைக்கு பகரம் கண்டும்
உயர்ந்தவகை ஒட்ட கங்கள்
ஒவ்வொன்றாய் குர்பான் ஈடாய்
சிகரத்தில் மனிதம் வாழ
செயலாற்றி வாழ்ந்த கோமான்
பகரங்கள் ஏதும் உண்டோ
பண்பாளர் நபிக ளார்க்கு !
அகரமுதல் ஆதி தொட்டு
அக்குடும்பம் பட்டத் தொல்லை !
நிகராகா ஹுசைனார் துன்பம்
நீண்டதங்கே சிரசைக் கொய்தும் !
இறைக்காக அர்ப னிப்பு
இவ்விதமாய் இருக்க காப்பு !
மறைவேதம் காட்டும் மாண்பு
மனிதாநீ மனிதன் ஆக !
திரைகொண்டு வடிக்கும் பாதை
தியாகப்பெ ருநாளாய்ப் பாடம் !
முறையாக உன்னில் காணு
முன்னேற அதனுள் பேணு !
அருவவனின் தூதாய் வந்த
அண்ணலார் தியாக வாழ்வை
அருள்நிறைவாய் அடையக் காணு !
அனைவரையும் தானாய்க் காண !
திருநாளில் வணக்கம் தந்தார்
திருவவனில் மூழ்கச் சொன்னார்
பெருமானார் வாழ்வே இன்பம் !
பேரின்பங் காண வேண்டும் !
விளக்கம்: (சில வற்றிற்கு)
தீஞ்சுடரைத் தேகம் வென்றும் -: அன்று இப்றாஹீம் நபி (அலை) அன்னவர்கள் நெருப்புக் குண்டத்தில் வீசப்பட்டபோது அத்தீசுவாலைத் தீண்டாது இதமாகவே அன்னவர்களை காத்தது. எந்த பாதிப்புமின்றி அதிலிருந்து வெளிவந்தனர்.
அயராது கனவு வந்தும் -: நபி இப்றாஹீம் (அலை) அன்னவர்களுக்கு மீண்டும் மீண்டும் தம் மகனார் நபி இஸ்மாயில் (அலை) அன்னவர்களை குர்பானி கொடுப்பதுபோல் கனவு வந்தது.
அழைத்தவுடன் தன்னைத் தந்தும் -: தந்தையார் நபி இப்றாஹீம் (அலை) தம் கனவுகளை கூறி இறைகட்டளையை நிறைவேற்ற அழைத்தபோது தயங்காது 'இறைவன் இட்ட கட்டளையை நிறைவேற்றுங்கள்', தந்தையே என்று நபி இஸ்மாயில் (அலை) அன்னவர்கள் தன்னை அறுத்து இறைவனுக்காக அர்பனிக்க முன்வந்தார்கள்.
துயரங்கள் தொடர்ந்து வந்தும்
தொல்லைக்கு பகரம் கண்டும்
உயர்ந்தவகை ஒட்ட கங்கள்
ஒவ்வொன்றாய் குர்பான் ஈடாய் -: இவ்வாறு தொடர் துயர்சோதனைகள் பல தொடர்ந்து அந்நபி வழி குடும்பத்தில் பெருமானார் (ஸல்) அன்னவர்கள் தந்தை அப்துல்லாஹ் அன்னவர்களை பலியிடப்படவேண்டும் என்றொரு நிகழ்வு ஏற்பட அதற்கு பகரமாக 100 ஓட்டகைகளை அறுத்து பலியிட்டு காக்கப்பட்டார்கள்.
நிகராக ஹுசைனார் துன்பம்
நீண்டதங்கே சிரசைக் கொய்தும் -: அன்னலார் பெருமானார் அன்னவர்கள் வழிப் பேரர் இமாம் ஹுசைனார் (ரலி) அவர்களின் சிரசை கர்பலா யுத்தத்தில் கொய்தனர் மாபாதகர்கள்.
அருவவனின் தூதாய் வந்த -: உருவமற்றவன் இறைவன். அவனின் தூதவராக வந்தவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்.
ஷேக் அப்துல்லாஹ் அ.
அதிராம்பட்டினம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.